49 ஆண்டுகளாக அதிரையின் அறிவொளி சுடராக திகழும் இமாம் ஷாஃபி மேல்நிலை பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எரிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியான அப்துல் அஜீஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். மேலும் மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு குறித்து கூறியதுடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக மாணவர்களும் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளை கண்டு வியந்த விஞ்ஞானி அப்துல் அஜீஸ், பின்னர் அவற்றிற்கான விளக்கங்களை அளித்தார்.