Saturday, April 20, 2024

ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் : நூற்றுக்கணக்கான அதிரையர்கள் சென்னை சென்றனர்!

Share post:

Date:

- Advertisement -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் – 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் அதிரை வந்த சிறப்பு ரயிலில், அதிரையர்கள் பலர் வந்திறங்கினர்.

அதேபோல் மறுமார்க்கமாக நேற்று மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் வந்தது. தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை இன்றுடன் முடிவதால், அதிரையர்கள் நூற்றுக்கணக்கானோர் ராமேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால் அதிரை ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் நிரம்பி காணப்பட்டது.

இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் பலரும், இந்த சிறப்பு ரயில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும், அதேசமயம் சென்னையில் இருந்து திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் தினசரி ரயிலை இயக்கினால், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது ரயில் பயணிகளின் கோரிக்கை மட்டுமல்லாது, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துபேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...