Friday, April 19, 2024

பாஜக தலைவரின் பொய் கணக்கு – 61பேரில் 11 பேர் என்பது 60 சதவீதமா?

Share post:

Date:

- Advertisement -

அம்பலமான அண்ணாமலையின் அடுத்த பொய்

கடந்த சில தினங்களாக தமிழக உளவுத்துறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் 60% பேர் பணியாற்றி வருகிறார்கள் என்று தொடர்ந்து கூறி வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
அதிலும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவுக்கு அளித்த பேட்டியில் டிஎஸ்பி பதவிக்கு மேலான பணியிடங்களில் அவ்வாறு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அது குறித்து விசாரிக்கையில் நமக்கு கிடைத்த தகவலின் படி அண்ணாமலை குறிப்பிடும் டி எஸ் பி ஏடிஎஸ்பி மற்றும் எஸ்பி பணியிடங்கள் என உளவுத்துறையில் இருப்பது 61.
அதில் 11பேர் கிறிஸ்தவர்கள்.

திமுக அரசு பதவி ஏற்றபின் உளவுத்துறையில் பணி மாற்றலாகி நியமிக்கப்பட்ட மொத்த அதிகாரிகள் எண்ணிக்கை 15. அதில் கிறித்துவர்கள் 4 பேர். புதிதாக பணிமாற்றல் பெற்று வந்தவர்கள் இருவர் மட்டுமே‌.

ஏற்கனவே
உளவுத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி உளவுத்துறையில் பதவி உயர்வு மூலம் வந்தவர்கள் இருவர்.

உண்மை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயும் சோற்றில் மறைப்பது போல 60% பேர் கிறிஸ்தவர்கள் என்று அண்ணாமலை கூறுவது அபத்தத்தின் உச்சம்.

  • மொத்தம் உள்ள 61 பேரில் 11 பேர் என்பது 60 சதவீதமா? 10 சதவீதமா ? என்பது பாஜக தலைவர் அண்ணாமலைக்கே வெளிச்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...