Home » அதிரையில் பல்ப் வாங்கிய எச்.ராஜா! வாய்விட்டு சிரித்த பொதுமக்கள்!!

அதிரையில் பல்ப் வாங்கிய எச்.ராஜா! வாய்விட்டு சிரித்த பொதுமக்கள்!!

by அதிரை இடி
0 comment

அதிரையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரை வரவேற்பதற்காக விழா மேடையில் மைக்கை பிடித்து நிர்வாகிகள் கோஷமிட்டனர். ஆனால் அங்கு கூடியிருந்த பெரும்பான்மையான பாஜகவினர் பதில் கோஷம் எழுப்பாமல் அமைதியாக நின்றிருந்தனர். பின்னர் எச்.ராஜாவின் பேச்சை மேடையிலிருந்த நிர்வாகிகளை தவிர வேறு யாரும் கை தட்டி ரசிக்கவில்லை. மேலும் பேசிக்கொண்டிருக்கும் போது பேருந்து நிலையத்தில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு அனைந்ததற்கு அரசியல் காரணம் பூசிய எச்.ராஜாவின் பேச்சைக்கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் வாய்விட்டு சிரித்தனர். பல்ப் அனைந்ததற்கு அரசியல் சாயம்பூச முயன்று எச்.ராஜா பல்ப் வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter