Friday, March 29, 2024

பயங்கரவாதம் எந்த மதத்திலும் இல்லை – அமீத்ஷா

Share post:

Date:

- Advertisement -

பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ‘பயங்கரவாதத்திற்கு நிதி கூடாது’ (No Money for Terrorism) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய அமித் ஷா, “பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும், எந்தக் குழுவுடனும் தொடர்புபடுத்தக் கூடாது.

பயங்கரவாதிகள் நாச வேலைகளைச் செய்ய பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்க டார்க் நெட் எனப்படும் இணைய வழியை பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக தங்கள் அடையாளத்தை மறைத்து வன்முறையை விதைக்கின்றனர்.

பயங்கரவாதமே சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்பது பயங்கரவாதத்தைவிடவும் அபாயகரமானது. ஏனெனில், பயங்கரவாதத்துக்கான வழியும், முறைகளும் இங்கிருந்துதான் வகுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது உலக நாடுகளின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. அதேபோல், பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன், தேசத்துடன் ஏதேனும் ஒரு குழுவுடன் தொடர்புப்படுத்தக் கூடாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...