தமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தாலுகா அமையும் பட்சத்தில் விவசாயிகள், மீனவர்கள், அடித்தட்டு மக்கள் உள்ளிட்டோர் அரசின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை எளிதில் பெறுவதுடன் காவிரி கடைமடை கிராமங்களும் மேம்படும். இந்நிலையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்று எம்.எம்.எஸ் அப்துல் கறீம் தலைமையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் தாலுகாவை விரைவாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பின்போது அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன், அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், NKS. சரீஃப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.