Friday, March 29, 2024

அதிராம்பட்டினம் தாலுகா! எம்.எல்.ஏ-யிடம் நேரில் வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டிலேயே அதிக கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக திகழும் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு தாலுகா அமையும் பட்சத்தில் விவசாயிகள், மீனவர்கள், அடித்தட்டு மக்கள் உள்ளிட்டோர் அரசின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை எளிதில் பெறுவதுடன் காவிரி கடைமடை கிராமங்களும் மேம்படும். இந்நிலையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்று எம்.எம்.எஸ் அப்துல் கறீம் தலைமையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் தாலுகாவை விரைவாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பின்போது அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன், அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், NKS. சரீஃப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...