Friday, April 19, 2024

கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் அதிரை சி.எம்.பி லைன் மக்கள்! சாலை பணியை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை சி.எம்.பி லைனின் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி முதலே பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2021ம் ஆண்டு தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கா.அண்ணாதுரையிடமும் சி.எம்.பி லைன் சாலை தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்த சாலையை ஊரக சாலையாக மாற்றி தரமான சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் கா.அண்ணாதுரை வலியுறுத்தினார். இந்நிலையில் சுமார் ரூ.2.50கோடி மதிப்பீட்டில் சி.எம்.பி லைன் பிரதான சாலையை சீரமைக்கும் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...