தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நிற்காது என்ற ரயில்வே இலாக்காவின் முடிவு அதிரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ரயில் மறியல் போரட்டத்தை அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அறிவித்து இருந்தது.
இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து நல்வாழ்வு பேரவை நிர்வாகிகளை தனித்தனியாக போன் செய்து போராட்ட அறிவிப்பு குறித்தும் ரயில்வே அதிகாரிகள் மேல் மட்டத்தில் அதிராம்பட்டினம் நிறுத்தம் தொடர்பாக தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதிரையில் விரைவாக ரயில் நிறுத்தம் செய்ய போதுமான நடவடிக்கைகளை திருச்சி கோட்ட மேலாளர் எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் நம்பகத்தன்மையான உறுதி மொழியை ஏற்று இந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவையினர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி அதிகாரிகள் மெத்தனப்போக்காக நமது நிறுத்ததை புறக்கணித்தால் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி வழுவான போரட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.