Friday, April 19, 2024

பத்ரு களம்- நினைவுகள்

Share post:

Date:

- Advertisement -

ஆயிரம் எதிரிகள் அங்கே
…..ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
…ஆணையைத் தயக்கமும் இன்றி!

சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
….சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
…. அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!

வானவர்க் கூட்டமும் வந்து
…..வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டம் ஒழிந்து
…அக்களம் வென்றனர் காணீர்!

இச்சிறு கூட்டமும் வெற்றி
….இன்றியே அழியுமே யானால்+
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
….அழைத்திட எவருமே உண்டோ”

நெற்றியைத் தரையினில் வைத்து
….நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
….வேகமாய் நிறைவுற செய்தான்!

தீனெனும் செடியினைக் காத்த
…தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
…தியாகிகள் நினைவுகள் வேண்டும்

ஆக்கம்:
கவியன்பன்” கலாம் அதிராம்பட்டினம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...