அதிரையில் இயங்கி வரக்கூடிய பிரபல பள்ளியான காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98 மாணவிகளில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 99% மாணவிகளை தேர்ச்சிபெற செய்து அப்பள்ளி சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆண்டு +2 தேர்வில் இப்பள்ளியில் 100% மாணவிகள் தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.