Home » +2 தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவிகள்!!

+2 தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவிகள்!!

by அதிரை இடி
0 comment

+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 600க்கு 575 மதிபெண்களை பெற்று காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி J.சுஹைனா அதிரையிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார். அதேபோல் இமாம் ஷாஃபி பள்ளியை சேர்ந்த மாணவிகளான அ.ஹம்னா (574) மற்றும் அ.ஹபீபா (566) ஆகியோர் முறையே!2ம் மற்றும் முன்றாம் இடங்களை பிடித்துள்ளனர். அதிரையை பொருத்தமாட்டில் கல்வியில் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter