Friday, March 29, 2024

சுட்டெரிக்கும் கோடை வெயில் – தொழுகையாளிகளுக்கு லெமன் ஜூஸ் வழங்கிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வந்திருக்கிறனர். தற்போது சங்க கட்டிடம் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகம் கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றி வருகின்றது.

இந்நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில், இன்று கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு ஜுமுஆ தொழுகைக்கு வந்த தொழுகையாளிகளுக்கு, தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது. இதன்படி இன்று சுமார் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது.

மேலும் வரக்கூடிய வாரங்களிலும் ஜுமுஆ தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளுக்கு ஜூஸ் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...