Wednesday, April 24, 2024

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும் – ஆந்திராவில் அறிமுகமாகும் பேட்டரி பஸ்..!!

Share post:

Date:

- Advertisement -

ஆந்திராவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த புதிய பேட்டரி பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. இந்த பஸ், 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள இந்த பேருந்துக்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் மானியம் வழங்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த பேட்டரி பஸ் கன்னவரம் விமான நிலையத்திலிருந்து வெலகம்புடிவரை இயக்கப்படும். மேலும், படிப்படியாக முக்கிய நகரங்களில் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏசி வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்த நிலையில் தற்போது பேட்டரி பேருந்தை ரூ.3 கோடிக்கு வாங்கி பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...