Saturday, April 20, 2024

புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க செலவிடப்பட்ட ரூபாய் எவ்வளவு தெரியுமா?

Share post:

Date:

- Advertisement -

புதுதில்லி: உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4,968 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவு; இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கண்மூடித்தனமான, புத்திசாலித்தனமற்ற முடிவாகும் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவிடப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. இதற்காக ரூ.4,968.84 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 365.4 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.1,293.6 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ரூ.7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...