Home » பெர்முடா முக்கோணத்தின் மர்மம் உண்மையில் முடிவுக்கு வந்ததா ??

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் உண்மையில் முடிவுக்கு வந்ததா ??

0 comment

உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம்.

இங்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதனால் கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் பறக்கும் விமானங்கள் மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது. அதற்கான பதிலை தான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) அமைந்திருக்கின்றன. மேலும், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணத்தால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.

பெர்முடா பகுதியில் அறுங்கோண வடிவில் அமையும் மேகங்கள் ஏறத்தாழ 20 -55 மைல் தூர அகலத்தில் அமைகின்றன. இவை பெர்முடா முக்கோணத்தின் மேற்கு பகுதியில் தான் பெரும்பாலும் அமைகிறது. இவ்விடம் தான் மிகவும் அபாயமானது என மக்கள் கருதி வந்தனர். இங்கு சில மேகங்கள் நேர் கோடு வடிவில் அமைகின்றன. இது அசாதாரணமானது ஆகும்.

மணிக்கு 170 மைல் வேகத்தில் 45 அடி உயரத்தில் அலைகள் அடித்தால் எப்படி இருக்கும். அப்படி தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் அலைகள், புயல் மற்றும் மேகத்தின் தாக்கத்தினால் உருவாகின்றன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter