Tuesday, December 2, 2025

அதிரை இரயில் நிலையத்தில் மாபெரும் அறவழி போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

மீட்டர் கேஜ் ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் மீண்டும் இந்த வழித்தடத்தில் இயக்கவேண்டும் என அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹ்மத் அலி ஜாஃபர் தலைமையில் அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அறவழி போராட்டம் அறிவித்துள்ளது.

பாரம்பரிய மிக்க அதிராம் பட்டினம் ரயில் நிலையத்தில் அதிக வருவாய் ஈட்டிய பொழுதும், சென்னைக்கு செல்ல ரயில் நிறுத்தம் செய்யாத ரயில்வே இலாக்கா அதிகாரிகளை கண்டித்தும், கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும். இவ்வழித்தடத்தில் இயக்கிட கோரியும், தாம்பரம்- செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவு ரயிலை அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வலியுறுத்தியும் மாபெரும் கண்டன அறவழி போரட்டம் நாளை 1/9/2023 நண்பகல் 1.30 மணியளவில் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெறும் என்று அதிரை நல்வாழ்வு பேரவை அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ரயில் பயணிகள் சங்கமும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img