Saturday, December 13, 2025

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img

திட்டமிட்டே வஞ்சிக்கப்படும் அதிராம்பட்டினம்

கடந்த வெள்ளிக்கிழமை 16 -11-2018 அன்று கஜா புயலினால் தமிழகத்தின் பெறும்பாலான கடலோர மாவட்டங்கள் பெறும் பாதிப்புக்குள்ளாகியது.

குறிப்பாக கடலோர பகுதியான அதிராம்பட்டினம் 111 கி.மீ வேகத்தின் புயலுக்கு இரையானது ஏறத்தாழ இந்த கிராமம் 90% அழிந்துவிட்டது.

அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பேரிடர் மீட்பு குழுக்களோ அல்லது அரசு ஊழியர்களோ இதுவரை முற்றிலும் அழிந்த இக்கிராமத்தின் அழிவை ஆய்வு செய்யவோ மீட்பு பணிகளை செய்யவோ முன்வரவில்லை மாறாக திட்டமிட்டே இந்த கிராமம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

புயலினால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மக்களுக்கு இதுவரை எந்தவொரு அடிப்படை வாழ்வாதார வசதிகளும் வழங்கப்படவில்லை குறிப்பாக, மருத்துவம், உணவு, குடிநீர், மின்சாரம், போன்றவைகள்.

பச்சிளம் குழந்தைகளும், வயதான முதியவர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் சொல்லொணாத் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர் தொலைதொடர்புகளும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இந்த கிராமமே இருள்சூழ்ந்து காணப்படுகிறது கடந்த மூன்று நாட்களாக.

பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உணரவேண்டும், இல்லையேல் உணர்த்தப்படும்.

ஆக்கம் : வஜிர் அலி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img