Friday, February 6, 2026

அதிரையில் திடக்கழிவு என்னும் பெயரில் வரி வசூலிக்கும் பேரூராட்சி…எதற்கு என தெரியாமல் பணம் செலுத்தும் மக்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கடந்த ஆண்டுக்கான(2018-2019) தண்ணீர் வரி, சொத்து வரி, வீட்டு வரி ஆகியவை செலுத்தாத பொதுமக்களிடம் நேரடியாக அவர்களின் வீட்டுக்கே சென்று பணம் செலுத்தும் முறையை அதிரை பேரூராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

அதிரை பேரூராட்சியால் ஓரு அமைப்பைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த வரி வசூலித்து முறையில், நேரிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு உடனே ரசீதும் கொடுக்கப்படுகிறது.

ஆனால் அவ்வாறு வசூலிக்கும்போது திடக்கழிவு என்னும் பெயரில் தனியாக பணம் வசூலிப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால், அதற்கு வசூலிப்பவர்கள் சரியான விளக்கம் கொடுப்பதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இந்த திடக்கழிவு என்னும் பெயரில் பணம் வசூலிப்பது ஏன் ? என்னும் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img