Saturday, December 13, 2025

வருமானம் இல்லாத பள்ளிகளுக்கு அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் நடத்திவரும் இஃப்தார் நிகழ்ச்சி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. வருமானம் இல்லாத பள்ளிகளில் இந்த ஆண்டு அதிரை சகோதர்கள் குழுமதினால் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26/05/2019) பழஞ்செட்டி தெருவில் அமைந்துள்ள ஏ.ஜே பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனால் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து மகிழ்ச்சியடைந்தனர். அதைப்போல் எதிர்வரும் புதன்கிழமை சொரைக்காகொள்ளையில் அமைந்துள்ள உமர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி அதிரை சகோதரர்கள் குழுமதினால் நடத்தப்பட உள்ளன என தெரிவித்துக்கொள்கிறார்கள்.

அதிரையில் வருமானம் இல்லாத பள்ளிகளில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்த சகோதரர்களுக்கு அதிரை சகோதர்கள் குழுமம் சார்பில் நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img