தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை, பெரம்பலூர், காஞ்சிபுரம், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர் ஐபிஎஸ், காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் ஐபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.








