Saturday, April 27, 2024

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா!

Share post:

Date:

- Advertisement -

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி என முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட வந்த ராகுல், இறுதியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லவிருந்தார்.

இந்நிலையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக தனது மேற்கு வங்க பிரச்சார பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மேற்கு வங்க மாநில பிரச்சார பயணத்தை ராகுல் ரத்து செய்ததற்கு அவருக்கு ஏற்பட்ட உடல்வலியும், சோர்வும் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இப்போது அதனை உறுதி செய்யும் வகையில் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று ராகுலுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும், ராகுல்காந்தியின் அன்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...