Friday, December 19, 2025

சாலையை சுத்தம் செய்ய குடிநீர்… 1.4 லட்சம் லிட்டர் வீணானது… மோடி பேரணிக்காக நடந்த ஒருநாள் கூத்து !

spot_imgspot_imgspot_imgspot_img

பிரதமர் மோடி இன்று வாரணாசியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக நேற்று அவர் பெரிய சாலை பேரணியை வாரணாசியில் நடத்தினார். இதில் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை மதன் மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மோடி இந்த பேரணியை தொடங்கினார். இந்த ரோட் ஷோ கங்கை நதி தீரம் வரை நடைபெற்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி பேரணியை அடுத்து நேற்று முதல் நாள் வாரணாசி முழுக்க சுத்தம் செய்யப்பட்டது. அனைத்து சாலைகளும் மீண்டும் போடப்பட்டு, தெரு ஓரங்கள் அலங்காரம் செய்யப்பட்டது. முக்கியமாக பிரதமர் மோடி செல்லும் சாலை பார்த்து பார்த்து அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அதிக அளவில் தண்ணீர் வீணாக்கப்பட்டது. மொத்தம் வாரணாசியில் உள்ள 40க்கும் அதிகமான தண்ணீர் டேங்குகள் இதற்காக மொத்தமாக துடைத்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது . 400 பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டார்கள். மேலிடத்தில் இருந்து நேரடியாக வந்த ரிப்போர்ட் இது என்கிறார்கள்.

இதற்காக மொத்தம் 1.4 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க குடிநீர் ஆகும். நல்ல நிலையில் குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலையை துடைக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் இன்று வாரணாசியில் மக்கள் தண்ணீர் வராமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 45% வீடுகளுக்கு வாரணாசியில் இன்று தண்ணீர் வரவில்லை. அதேபோல் தண்ணீர் லாரிகள் எதுவும் தண்ணீர் இல்லாததால் இன்று குடிநீர் சப்ளை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img