Friday, February 6, 2026

அதிரையில் தடையை மீறி தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள்… அதிரடி ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கின…!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை உத்தரவை மீறி தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளும் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருமளவில் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.

கிட்டத்தட்ட 17 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக ரூ. 8,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சுற்றுசூழலைக் காக்க முடியும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img