Monday, February 9, 2026

அதிரையில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற செய்யது நவாஸ், பிற்பகல் 3 மணியளவில் திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் பின்பக்கச் சுவற்றில் ஏறி குதித்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 1/2 சவரன் தங்க நகையையும், ரூ.26,000 ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனே அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விரைந்து வந்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

பட்டப்பகலில் பிரதான சாலையில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img