Monday, December 1, 2025

பிலால் நகர், MSM நகர் உள்ளிட்டவற்றை தனி ஊராட்சியாக உருவாக்குக – எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.எம். நகருக்கு இன்று வருகை புரிந்திருந்தார். அப்போது பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் சார்பாக எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் பிலால் நகரில் ரோடு, வடிகால் வாய்க்கால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியும், ஏரிப்புறக்கரை ஊராட்சியை தெற்கு, வடக்காக பிரித்து பிலால் நகர், ஆதம் நகர், எம்.எஸ்.எம் நகர், சவுக்குகொல்லை, சாணாவயல் ஆகியவற்றை தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சக்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், செயலாளர் கமாலுதீன், துணை தலைவர் அலி அன்வர்தீன், துணை செயலாளர் முஹமது, நிஜாஸ் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளும், முஹல்லாவாசிகளும் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img