Saturday, December 13, 2025

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.

தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையால், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் அதிரையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக அதிகாலை முதலே மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அதிராம்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதிரையில் உள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் அவசரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கீழ்கண்ட பேரிடர் மீட்புக்குழுவை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img