Wednesday, April 15, 2026

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த DTCP (நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை) மற்றும் நகராட்சி தகவல் அலுவலர் வழங்கிய தகவலில், கட்டிடத்திற்கு உரிய திட்ட அனுமதி வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட முக்கிய நிர்வாகக் கட்டிடத்திற்கே தேவையான சட்டப்பூர்வ அனுமதி இல்லையெனில், அது எவ்வாறு கட்டப்பட்டது?மக்களின் 5கோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, இந்த விரயத்திற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சாமானிய மக்கள் கட்டும் கட்டிடத்திற்கு அப்ரூவல் வழங்க இழுத்தடிக்கும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கட்டிடத்திற்கு எவ்வத ஒப்புதலும் இல்லாமல் அனுமதி வழங்கியது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உங்கள் பட்ஜெட்டில் அழகிய வீட்டு மனை: அதிரை ECR-ல் விற்பனைக்குத் தயார்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR)...

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...
spot_imgspot_imgspot_imgspot_img