அதிரை பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் உருவாகிறது.
இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்ணும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு வருகிறது.
இதனை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் குடிநீர் கொட்டகையை அமைத்தார்.
பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற வேண்டும் என்பது விதி. இதற்காக பேரூராட்சிக்கு பொதுமக்கள் வரியும் செலுத்துகின்றனர். ஆனால் அப்பகுதியில் பேரூராட்சியின் சார்பில் வீடுகள் தோறும் குப்பைகள் பெறுவதில்லை. இதனால் வேறு வழி இன்றி அப்பகுதி மக்கள் மீண்டும் அந்த கொட்டைகையருகேயே குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மீண்டும் தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி நிர்வாகம் வாய்க்கால் தெரு பகுதியில் வீடுகளுக்கே சென்று குப்பையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.