Thursday, February 5, 2026

இரட்டை வேடம் போடும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று குப்பைகள் வாங்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதிரையின் பெரும்பாலான பகுதிகளில் இத்திட்டம் கைகழுவப்பட்டுவிட்டது. அவ்வாறு சில பகுதிகளில் இத்திட்டம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.

சரி விஷயத்திற்கு வருவோம்… அதிரை பேரூராட்சிக்குட்பட்ட 13வது வார்டு வாய்க்கால் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கென்று தனியாக இடமில்லை. பேரூராட்சியின் சார்பில் வீடுகளுக்கே நேரடியாக சென்று குப்பைகள் பெற்று வந்தனர். ஆனால் கடந்த ஒரு வார காலமாக குப்பைகளை பெறுவதற்கு பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் வரவேயில்லை. இதனால் கடந்த ஒரு வாரக்காலமாக குப்பைகள் வீட்டில் அப்படியே கிடக்கின்றன. அக்குப்பைகளால் வீடுகளில் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் கொடிய நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு, நீங்கள் குப்பையை கொட்டுவதற்கு இடத்தை சொல்லுங்கள். அப்படி சொன்னால் தான் நாங்கள் குப்பையை வந்து வாங்குவோம். இல்லையென்றால் வாங்கமாட்டோம். நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அதிரை பேரூராட்சி சார்பில் கடந்த மாதம் தான் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. ஆனால் இப்போது டெங்கு காய்ச்சல் பரவுவதற்கும் அதிரை பேரூராட்சிதான் காரணமாக உள்ளது. ஊரிலே பழமொழி ஒன்று சொல்லுவார்கள்… தொட்டிலையும் ஆட்டுவார்களாம் , பிள்ளையையும் கிள்ளுவார்களாம்.. இது அதிரை பேரூராட்சிக்கு அப்படியே பொருந்துகிறது.

மழைக்காலமும் விரைவில் தொடங்க இருப்பதால் இவ்விவகாரத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்து 13வது வார்டு மக்களின் துயரை போக்க வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img