Friday, December 19, 2025

அமெரிக்கா உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ்… இலங்கையில் கலகக் குரல் !

spot_imgspot_imgspot_imgspot_img

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து விசாரணைக்காக அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டுள்ளதற்கு தேசிய சுதந்திர முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உருவாக்கியதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு; அதுதான் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது; ஆனால் அமெரிக்காவோ விசாரணை என நாடகமாடுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜயந்த சமரவீர சாடியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற‌ போர்வையில் அமெரிக்கா, இங்கிலாந்தின் புலனாய்வு அமைப்புகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம். ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான்.

பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தூண்டிவிட்டு குறிப்பிட்ட நாடுகளுக்குள் நுழைந்து அதிகாரம் செய்வதுதான் அமெரிக்காவின் வேலை. எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள் உள்ள நாடுகளை தம்பிடியில் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டம் இது. லிபியா, சிரியா, ஈராக்கில் இதனைத்தான் அமெரிக்கா செய்தது.

விடுதலைப் புலிகளை ஒழித்த இலங்கை ராணுவத்துக்கு வெளிநாட்டு உதவிகள் தேவை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img