Friday, May 3, 2024

காலால் செல்ஃபி எடுத்த மாற்றுத்திறனாளி சிறுவன்… சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்த கேரள முதல்வர் !

Share post:

Date:

- Advertisement -

கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வித்தியாசமான திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறார். கேரளாவை ஆட்சி செய்த முதல்வர்களில் மிகவும் சிறப்பானவர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

கேரளாவில் மழை வெள்ளம் வந்த போது மக்கள் இவருக்கு பெரிய ஆதரவு தந்தனர். அப்போது இவர் செய்த பணிகள் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவர் இன்று சந்தித்தார். கேரளா வெள்ளத்திற்காக அவர் நிதி உதவி வழங்கினார். முதல்வரின் தனிப்பட்ட நிவாரண நிதிக்கு அவர் பணம் கொடுத்தார்.

இந்த நிதி உதவி வழங்கிய சிறுவனுக்கு கைகள் இல்லை. இதனால் அவர் தன்னுடைய கால்கள் மூலம் இந்த பணத்தை கொடுத்தார். அதோடு இவர் தன்னுடைய காலால் முதல்வர் பினராயி விஜயன் உடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

முதல்வர் எந்த விதமான பந்தாவும் இன்றி அந்த சிறுவன் காலால் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டார். அதோடு, காலால் எடுக்கும் செல்பியில் சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...