Thursday, May 2, 2024

அதிரை : சீமான் கட்சியிலிருந்து வெளியேற துடிக்கும் தம்பிகள் ?

Share post:

Date:

- Advertisement -

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.

இவரின் ஆற்றல்மிகு பேச்சாற்றலால் ஈர்த்த இளைஞர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க துல்கர் சல்மான் எடுத்த திரைப்படத்தில் பிரபாகரன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர்கட்சியினர் வெகுண்டு எழுந்தனர்.

ஆனால் நாம் தமிழர்கள் துல்கர் சல்மான் மீது புழுதி வாரி வீசுவதில் தவறில்லை.

இதனை விடுத்து துல்கர் சல்மான் சார்ந்த மதத்தின், போற்றுதலுக்கு உரிய முஹம்மது நபியை தரம் தாழ்த்தி எழுதி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கட்சிக்குள் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு வித நெருடலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிரை நாம் தமிழர் கட்சியின் அயலக உறுப்பினர் ஒருவர் தனது அடிப்படை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அனைத்து பொருப்புகளில் இருந்தும் விடுபடுவதாக மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைமை ஆயிரம் விளக்கங்களை கொடுத்தாலும், கட்சியின் கொள்கைக்கு முரணாக அடுத்த மதத்தின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அந்த கயவர்கள் மீது இதுவரை வழக்கு ஏதும் இதுவரை தொடர வில்லை என்றும், இதனால் அடைந்த விரக்தியே அக்கட்சியில் இருந்து விலக நேரிடுவதாக தங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...