Saturday, March 28, 2026

அதிரையில் அட்டூழியம்! ஏழை மாணவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் மனித மிருகங்கள்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மேலத்தெருவில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கிய இப்பள்ளியை தற்போது முன்னாள் மாணவர்கள் புனரமைத்தனர். கழிவறைக்கு டைல்ஸ், பி.வி.சி கதவு, பள்ளி வளாகத்தில் குடிநீர் அருந்தும் குழாய் மற்றும் அந்த இடத்திற்கு டைல்ஸ் போன்றவைகளையும், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தேவையான இன்னும் பிற ஏற்பாடுகளையும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பள்ளிக்குள் இரவு நேரத்தில் நுழைந்த மர்மநபர்கள் கழிவறை கதவுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் தண்ணீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மாலை நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்துதலும் தொடர் கதையாக உள்ளது. இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட பணிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கி இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஊரின் மைய பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கே பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு காலமே பதில் சொல்லும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img