தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை வெள்ளிக்கிழமை(02/07/2021) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக அதிரை மின்வாரிய அதிகாரியை நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிரையில் நாளை மின்தடை என்பதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், நாளை அதிரையில் முழுநேர மின்வெட்டு கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அதிரையில் நாளை(02/07/2021) மின்வெட்டு என்று பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





