அதிராம்பட்டினம் OSK அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் அணியின் ஒருங்கிணைப்பாளராக ஜியாவுதீன் நியமிக்கப்பட்டு களமாடுவது என தீர்மாணித்து இருக்கிறார்கள்.
அதன்படி பிரிந்து கிடக்கும் சமூகத்தை ஓரணியில் திரட்டி ஒற்றுமையை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிலைநாட்ட போராட உள்ளாதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் தெரிவித்து இருக்கிறார்.
OSK கூட்டணியில் போட்டியிட உள்ள சமூக ஆர்வலரும் தமுமுகவின் மாநில செயலாளருமான அஹமது ஹாஜா போட்டியிடுவார் என எதிர்பார்க்க படுகிறது.
அதே போல மனித நேய ஜனநாயக கட்சியினர், முழுமையாக ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள் என்றும், மமக,SDPI, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளை சந்திக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், SDPI விரைவில் இக் கூட்டணியில் இணையும் நடவடிக்கைகளை செய்து வருகிறது.
திராவிட கட்சிகளின் மீது அதிருப்தி கொண்ட அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் இக்கூட்டணிக்கு தங்களின் முழு ஆதரவை வழங்கி வருகிறார்கள் என ஜியாவுதின் தெரிவிக்கிறார்.