Monday, December 15, 2025

உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயல்பட்ட இளைஞர் ஹவாஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் கடந்த 20ம் தேதி மாலை பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது.

பின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். உடனே அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தில் சிக்கியவர் 3 மணி நேரங்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே, அவருடைய காலை plastic surgery மூலம் சேர்க்க முடியும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் மதுரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸை மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜா இயக்கினார்.

3 மணி நேரத்திற்குள்ளாக மதுரை சென்றால் மட்டுமே காலை பொறுத்த முடியும். ஆனால் மிகவும் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹவாஜா 2.45 மணி நேரத்திலேயே மதுரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.

உடனே விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் பொருத்தப்பட்டது. உயிர் காக்கும் சேவையில் துரிதமாக செயல்பட்டு ஒருவரின் கால் திரும்ப கிடைக்கும் வகையில் ஆம்புலன்ஸை வேகமாக ஓட்டிச் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் எஸ்டிபிஐ வழக்கறிஞர் சபியா நிஜாமிடம் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img