Wednesday, December 17, 2025

அதிரை கடற்கரைத்தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தேங்கி நிற்கும் மழைநீர்…நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. புயலின்போது அதிரையில் 111 கீ.மி வேகத்தில் காற்று வீசியது. மேலும் பலத்த மழையும் பெய்தது. இதனால் மரங்கள், மின்கம்பிகள் சேதமடைந்தன. கூரை வீடுகளும் பலத்த சேதத்தை சந்தித்தன.

அப்போது பெய்த கனமழையின் காரணமாக அதிரை கடற்கரைத்தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக வடிகால் வெட்டப்பட்டு, மழைநீர் முழுவதும் ஓடுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பெய்த மழையால் அதே இடத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் மழைநீரால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி நோய் பரவுவதற்கு முன் அந்த மழைநீர் ஓடுவதற்கு நிரந்தர வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img