Thursday, December 4, 2025

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் ஐபிஎல்-ன் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித்- டி காக் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வந்தன.

இறுதியில் 20 ஓவர் முடியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் போலார்டு 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்தார். சென்னை பந்துவீச்சில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 32 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன்-டு பிளஸ்சிஸ் ஜோடி துவக்கம் தந்தது. எந்த ஒரு வீரரும் முறையாக ஆடவில்லை. எல்லாம் வருவதும் நடையை கட்டுவதுமாக இருந்தனர். வாட்சன் மட்டும் இறுதி வரை போராடி 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாக்கூர், மலிங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் ஆகி கோப்பையை கைப்பற்றியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img