Monday, February 2, 2026

நினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது… கடுமையான காற்று மாசுபாட்டால் டெல்லி அரசு எடுத்த அதிரடி முடிவு !

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லியில் காற்று மாசுபாடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், ‘கார் ரேஷன்’ நடைமுறையை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

டெல்லியில் வாகனப் போக்குவரத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆட்-ஈவன் (Odd-Even) என்ற இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்று ஆரம்பித்து உள்ள இந்த கெடுபிடி வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

●அதாவது வாகனங்களின் பதிவு எண், 2, 4, 6, 8 போன்ற இரட்டைப் படை (Even) எண்களில் முடிவடைந்தால் அந்த வாகனங்களை, Even நாட்களில் மட்டுமே சாலையில் ஓட்ட முடியும்.

●3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை (Odd) எண்களில் முடிவடைந்தால் அந்த கார்கள், அதுபோன்ற தினங்களில் தான் சாலையில் இயங்க முடியும்.

●இந்த விதிமுறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விதிவிலக்கு.

●அதேநேரம் இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நெறிமுறை பொருந்தாது.

●2016ம் ஆண்டில் இது போன்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டது, ஆனால் இப்போது எரிவாயு மூலம் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு கிடையாது.

●அரசின் இந்த விதிமுறையை மீறி இயங்கக்கூடிய வாகனங்களுக்கு ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்,
இதில் மற்றொரு சலுகையும் செய்யப்பட்டுள்ளது.

●ஒருவேளை தவறான பதிவு எண் இருந்தால் கூட பெண்கள் மட்டுமே காரை இயக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. கூடவே ஆண் யாராவது அமர்ந்திருந்தால் அப்போது அபராதம் கேரண்டி.

●மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடிய தனியார் பஸ்களும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற விஐபிகளுக்கு இதில் விலக்கு உண்டு.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img