Monday, February 2, 2026

கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து !(வீடியோ)

spot_imgspot_imgspot_imgspot_img

தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதிய பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

நேற்று தெலுங்கானாவில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. தென்னிந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான ரயில்நிலையங்களில் கச்சிகுடா ரயில்நிலையம் ஒன்று. திருச்சி ஜங்ஷனுக்கு இணையான வரலாற்றை கச்சிகுடா நிலையம் கொண்டுள்ளது.

கோவையில் இருந்து டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சிகுடா ரயில் நிலையில் 15 நிமிடம் நின்றுவிட்டுதான் செல்லும். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

அங்கு பிளாட் பார்ம் எண் 3ல் கொங்கு விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர் திசையில் தவறுதலாக வந்த புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில் மீது வேகமாக மோதியது. இரண்டு ரயிலும் இதில் மோசமாக சேதம் அடைந்தது. மின்சார ரயில் தடம் புரண்டது.

இதையடுத்து துரிதமாக நேற்று மீட்பு பணிகள் நடந்தது. இரண்டு ரயிலில் இருக்கும் பயணிகளையும் மீட்கும் பணி வேகமாக நடந்தது. மின்சார ரயிலின் ஓட்டுனரை மீட்க மட்டுமே 6 மணி நேரம் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து எப்படி நடந்தது என்று அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இரண்டு ரயிலும் மோதுவது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. ரயில்கள் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகளை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காயம் அடைந்த ஓட்டுனரின் உடல்நிலை மட்டும் மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img