Friday, February 6, 2026

மஜக தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சியில் தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சி சேதுசாலையில் நடைபெற்றது.

இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கொடியேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NRC,CAA,NPR ஆகிய நாசகார சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பை நல்க கூடாது என்றும், தமிழகரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

முன்னதாக திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், இந்த நாசகார சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சொன்னது போல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டமாகும் என்றார்.

மேலும் பேசிய அவர் மத மாட்சரியங்களை கடந்து எல்லோரும் ஓர் அணியில் இணைந்து இந்த நாசகார சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிரை அமீன் நடந்து முடிந்த தேர்தலில் தமக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img