Saturday, September 13, 2025

மல்லிப்பட்டினத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை – குழப்பத்தில் பொதுமக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா தொற்றின் பரவலையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வருவதற்குண்டான வண்ண அட்டைகளை ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.

அதன்படி மல்லிப்பட்டிணம் பகுதியில் வெள்ளி மற்றும் செவ்வாய் மட்டுமே வெளியே வருவதற்குண்டான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது. மேலும் அனைத்து கடைகளையும் திறக்க கூடாது என்றும், மருந்தகங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும், நாளையில் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறையினருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று திடீரென இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு நாளை பகல் 1 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img