Monday, February 2, 2026

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ – பாபா ராம்தேவின் அடடே கண்டுபிடிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தன் கோரமுகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”யாராவது ஒரு நிமிடம் மூச்சு விட முடியுமானால், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என அர்த்தம்.

இது தவிர, உங்கள் நாசி வழியாக கடுகு எண்ணெயை வைத்தால், உங்கள் வயிற்றில் பாய்ந்து அங்குள்ள அமிலங்கள் காரணமாக கொரோனா வைரஸ் இறந்துவிடும்” என பகீர் என்று பேசியுள்ளார்.

உலக சுகாதார மையமும், உலக நாடுகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளைக் கண்டுப்பிடிக்க திணறும்வேளையில், இவர் எந்தவித ஒரு அறிவியல் ஆராய்ச்சியுமின்றி, மருத்துவ பரிசோதனை செய்யப்படாத ஒரு தகவலைக் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதைப்போல் பேசுகிறார்.

இவரின் இந்த பேச்சு மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகா மூலம் கொரோனா தொற்று குணமடையாது என மருத்துவத்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் மக்களைக் குழப்பும் வகையில் பொய்யான தகவலை பரப்பும் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img