Sunday, February 1, 2026

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது : வீதிகளில் உற்சாகமாக கொண்டாடிய பாலஸ்தீன் மக்கள்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த இரண்டு வாரங்களாக பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி தாக்குதல் நடத்தியது. இப்படி தொடர்ந்து 11 நாட்களாக இரு நாடுகளிலும் மிக பெரிய சேதமும் உயிர் பலியும் ஏற்பட்டது.

இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மேலும் பாதுகாப்பு அமைச்சரவை அறிக்கை “பரஸ்பர மற்றும் நிபந்தனையற்றது” என்று கூறியது.

இதை ஹமாஸ் ஏற்றுக்கொண்டு இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு (இங்கிலாந்து நேரம் நள்ளிரவு) தொடங்கும் என்று ஹமாஸ் உறுதிப்படுத்தியிருந்தது.

கடந்த 11 நாட்களாக நீடித்து வந்த சண்டையில் சுமார் 230 பாலஸ்தீனர்களும் , 12 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் போர் நிறுத்தம் காரணமாக பாலஸ்தீன மக்கள் வீதிகளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img