Tuesday, February 10, 2026

அதிரையில் பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி, பெற்றோர்கள் ஒப்புதலை பெற்று செலுத்த வேண்டும் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்-

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது.

அதன்படி அதிராம்பட்டினம் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்றுகாலை மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சுகாதார அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர்.

முறையாக பெற்றோர்களிடத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், சுகாதாரத்துறை நீதிமன்ற வழிகாட்டுதலில் யாருக்கும் ஊசி செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என அதில் கூறப்பட்டு உள்ளன.

ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நியாயமற்றது.

முன்னதாக தமுமுக மாநில செயலாளர் அஹமது ஹாஜா பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு சட்ட வழிமுறை குறித்த ஒரு கடிதம் வழங்கியுள்ளார்.

இருப்பினும் இன்றுகாலை தொடங்கிய தடுப்பூசி முகாமுக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் சிலர் பெற்றோர் ஒப்புதலுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பள்ளிக்கூட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்ய்ப்பட உள்ள பெற்றோர்கள் கலந்தாய்வுக்கு பின்னர் முகாம் நடத்த இருப்பதாகவும், விருப்பமுள்ள மாணவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img