Wednesday, December 17, 2025

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில  முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை பிடித்து இழுத்துள்ளார். இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும்,

பெண்களின் மரியாதைக்கும், மத நம்பிக்கைக்கும் எதிரான இத்தகைய அநாகரிகச் செயல், ஒரு முதலமைச்சரிடமிருந்து வெளிப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.


கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் ஆகியுள்ளது நிதிஷ் குமாரின்  இந்த நிகழ்வு

எனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதிஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என அந்த அறிக்கையில்.குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img