Tuesday, April 30, 2024

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அரசு அதிரடி முடிவு !

Share post:

Date:

- Advertisement -

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உன்னவ் தொகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஆகியவற்றை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இதனிடையே இதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் அளித்தது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூடியது. மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறுமிகளை வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...