அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே இந்துமுண்ணனி மற்றும் பாஜகவினரால் வெட்டப்பட்ட செய்யதுவின் வழக்கு சம்மந்தமான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் வழக்கறிஞர் அதிரை நிஜாம்.
SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் வைத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரவில் பத்துக்கும் மேற்பட்டோர் வெட்டினர்.இதில் படுகாயமடைந்த செய்யது அவர்களை அன்றே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணாஜிப்பட்டினத்தை நால்வர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.இதில் அயூப் என்பவரை கைது செய்து அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அயூப் அவர்களை சந்தித்து வழக்கு குறித்தும்,பிணை போடுவது பற்றியும் சந்தித்து ஆறுதல் கூறிவந்துள்ளார்.புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பிணைக்காக(ஜாமீன்) மனுவும் அளித்துள்ளார்.
செய்யது அவர்களின் சார்பில் தாக்கிய நபர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸிருக்கு SDPI கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவிக்கையில் , கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்து நாங்கள் எங்கள் குழுவின் மூலமாக சட்டப்போரட்டத்தை தொடங்கியுள்ளோம்.மேலும் பாதிக்கப்பட்ட செய்யதுவிற்கு நீதி கிடைக்கும் வண்ணம் வழக்கும் கொடுத்திருக்கிறோம்.அயூப் என்பவர் கைது செய்துள்ளனர் அவருக்காக ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளோம்.கட்சியின் வழக்கறிஞர் குழுவின் ஆலோசனைப்படி அடுத்தடுத்த நகர்வுகள் என்று கூறினார்.
இந்த சந்திப்புகளில் வழக்கறிஞர் அதிரை நிஜாம் அவர்களின் மனைவி வழக்கறிஞர் ஷபியாவும்,சட்டக்கல்லூரி மாணவர் மல்லிப்பட்டினம் ஹவாஜவும் உடனிருந்தனர்.