Monday, April 29, 2024

தமிழக அரசின் தலைமைச் செயலராக சண்முகம் ஐஏஎஸ் பதவியேற்பு !

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அதிகாரிகள் பிரிவு உபாசார விழா நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகத்தை ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநர் மாளிகையோ ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ தலைமை செயலாளராக நியமிக்க தீவிரம்காட்டியது.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு காட்டியது. இதனால் புதிய தலைமை செயலாளர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

2010-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராகி உள்ளார்.

இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...