Saturday, December 13, 2025

அதிரையில் ஊரடங்கை கண்காணித்த காவல்துறையின் கழுகு கண் காமிராக்கள் !(வீடியோ இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

உலகை அச்சுறுத்தி கொண்டுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் அதிரையில் சில இடங்களில் இந்த ஊரடங்கை மதிக்காமல் இளைஞர்கள் மைதானங்களில் விளையாடுவதாகவும்,பொதுமக்கள் மாலை நேரங்களில் சிலர் வீதிகளில் நடமாடுவதாகவும் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அதிரை நகர காவல் எல்லைகளை கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்ட ட்ரோன் வரவழைக்கப்பட்டு கண்கானித்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை நல்கவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் மட்டுமே வீதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் ஜெயமோகன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த இடைக்கால சட்டத்தை மீறுவது சட்டப்படி குற்றம் எனவும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக இரண்டாண்டுகள் வரை சிறைவாசம் அணுபவிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், நீங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறார்கள்.

வீடியோ :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img